ஊழல் குற்றச்சாட்டில் வங்கதேச ஆல்-ரவுண்டர் நசிர் ஹொசைன்

ESPNcricinfo staff

நசிர் ஹொசைன் © AFP

அபுதாபி டி10 தொடரில் ஊழலில் ஈடுபட்டதாக வங்கதேச ஆல்-ரவுண்டர் நசிர் ஹொசைன் உள்பட 8 பேர் மீது ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற 2020-21 பருவத்தின்போது ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

டெவில்ஸ் அணியின் இணை உரிமையாளர்கள் கிரிஷன் குமார் சௌதரி, பரக் சங்வி, உள்நாட்டு வீரர்களான ரிஸ்வான் ஜாவெத், சலியா சாமன், பேட்டிங் பயிற்சியாளர் அஷார் ஸைதி, துணைப் பயிற்சியாளர் சன்னி தில்லான், அணி மேலாளர் ஷதாப் அஹமது ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

2021 பருவத்தில் டி10 தொடரின் அங்கமாக புனே டெவில்ஸ் அணி இருந்தது. சூப்பர் லீக்கில் 6 ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.

எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் ஊழலைக் கண்காணிப்பதற்காக ஊழல் தடுப்புப் பிரிவு நியமிக்கப்பட்டது. இந்தப் பிரிவுதான் ஊழல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்க 8 பேருக்கும் செவ்வாய்க்கிழமையிலிருந்து இரண்டு வார காலம் அவகாசம் உள்ளது.

Comments