ஆர்சிபி அணியின் இயக்குநராக மோ போபட் நியமனம்
ஆர்சிபி அணியின் இயக்குநராக இங்கிலாந்தைச் சேர்ந்த மோ போபட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்து அணியின் செயல்திறன் இயக்குநராகத் தற்போது பணியாற்றி வருகிறார்.
இங்கிலாந்து அணி கடந்த நான்கு வருடங்களில் ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகளை வென்றதற்கு மோ போபட்டும் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இதற்கு முன்பு, ஆர்சிபி அணியின் ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
2024 வரை பிப்ரவரி வரை இங்கிலாந்து அணியின் செயல்திறன் இயக்குநராக 40 வயது மோ போபட் பணியாற்றுவார். அதன்பிறகு ஆர்சிபி அணியுடன் இணைந்துகொள்வார்.
2011 முதல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் மோ போபட் பணியாற்றி வருகிறார்.
ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆண்டி பிளவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். ஃபிளவரும் மோ போபட்டும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் ஒன்றாகப் பணியாற்றியுள்ளார்கள்.
ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஐபிஎல் 2023 போட்டியில் 6-வது இடத்தையே பிடித்தது. இதனால் மொ போபட்டின் நியமனம் ஆர்சிபி அணிக்குப் புதிய முடிவுகளைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.