பதற்றமும், எதிர்பார்ப்பும் இல்லாமல் விளையாட வேண்டும்: திலக் வர்மா

ESPNcricinfo staff

திலக் வர்மா © AFP/Getty Images

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடரில், 2-வது ஆட்டம் இன்றிரவு நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்திய அணி, இத்தொடரில் 1-0 என்கின்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து 2-வது ஆட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் நடுவரிசை பேட்டரான திலக் வர்மா பேசியதாவது:

"எனது மனநிலை தெளிவாக உள்ளது. இந்திய அணியில் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய விருப்பப்படுகிறேன். எனக்கு எந்த வித பதற்றமும், எதிர்பார்ப்பும் இல்லை. கடந்த ஆட்டத்தில் 5-ம் வரிசையில் விளையாடினேன். அடிக்க வேண்டும் என்ற சூழல் என்றால் அடித்து ஆடுவோம், இல்லையெனில் ஸ்ட்ரைக்கை மாற்றிவிட வேண்டும் என்ற மனநிலையில் விளையாடினேன்".

"லெக் ஸ்பின்னரை அடித்து ஆட முயற்சித்தேன், அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர்களை சூர்யா அடித்து ஆடினார். இந்தியாவிற்காக ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்து தர ஆசைப்படுகிறேன். இதை ரிங்கு சிங்கிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன், அவர் அதை மிக நேர்த்தியாக செய்கிறார். இனி வரும் ஆட்டங்களில் நானும் அதைச் செய்ய முயற்சிப்பேன்" என்றார்.

மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையைப் பற்றி அவர் பேசியதாவது, இறுதிச் சுற்று நடந்த தினம், இந்திய அணியின் தினமாக இல்லை. மற்றப்படி ஓர் அருமையான உலகக் கோப்பை என்று தான் கூறவேண்டும். அதற்காக தற்போது நடைபெறும் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தவேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம் தான், அதில் வெற்றிப்பெற என்ன தேவையோ அதைச் செய்வோம் என்றார்.

Comments