இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஊருக்குத் திரும்பும் முன்னணி ஆஸி. வீரர்கள்

ESPNcricinfo staff

ஆஸ்திரேலிய அணி © Associated Press

டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வீரர்கள் ஊருக்குத் திரும்பும் நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 5 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதலிரு ஆட்டங்களிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜோஷ் இங்லீஷ், ஆடம் ஸாம்பா, கிளென் மேக்ஸ்வெல் ஆகிய 6 வீரர்களும் இன்று நடைபெறும் 3-வது டி20 ஆட்டத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியாவிற்குத் திரும்புகின்றனர்.

உலகக் கோப்பையில் விளையாடிய டிராவிஸ் ஹெட் மட்டும் எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் பங்கேற்க உள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அணியில் பென் துவார்ஷஸ், கிறிஸ் கிரீன், ஜோஷ் பிலிப், பென் மெக்டெர்மாட் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜோஷ் பிலிப், பென் மெக்டெர்மாட் ஏற்கெனவே இந்தியாவுக்கு வந்துவிட்ட நிலையில், பென் துவார்ஷஸ், கிறிஸ் கிரீன் ஆகியோர் ராய்ப்பூரில் நடைபெறும் 4-வது ஆட்டத்தின்போது அணியில் இணைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பேட் கம்மின்ஸ், இதன்மூலம் இளம் வீரர்கள் போதிய அனுபவத்தைப் பெற முடியும் என்றார்.

புதுப்பிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி: மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், டிம் டேவிட், பென் துவார்ஷஸ், நேதன் எல்லிஸ், கிறிஸ் கிரீன், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஜோஷ் பிலிப், தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், கேன் ரிச்சர்ட்சன்.

Comments